1. பூலோக வாழ்வு முடிந்து
மேலோகம் போ! ஆத்மாவே!
தேவ தூதர் படை சூழ
தேவ குமாரன் முன்னே
பல்லவி
சந்திப்போம் சந்திப்போம்,
சந்திப்போம் சந்திப்போம்
சந்திப்போம் ஆற்றின் கரையிலே
அங் கலைகள் புரளா
2. உன் ஆவியை ஏற்றிடவே,
உன் இரட்சகர் நிற்கிறார்;
அன்பின் கிரீடம் உனக்காக
அன்பர் வைத்திருக்கிறார்
3. இரட்சகரின் மார்பில் சேர்ந்து
இரட்சிப்பை நீ பெற்றிடு;
நித்திய இளைப்பாறல் ஈவார்
நித்தம் சந்தோஷிப்பார்
4. வேதனையை சகித்திட்டால்
நாதனோடரசாள்வாய்;
மரித்தும் நீ ஜீவிப்பாயே,
பரிசுத்தன் பலத்தால்