Uncategorized

Uyirthelum Kaalai Thannil – உயிர்த்தெழும் காலை தன்னில்

1. உயிர்த்தெழும் காலை தன்னில் ஆவி தேகம் கூடவும், துக்கம் நீங்கும் ஓலம் ஓயும் நோவும் போம். 2. ஆவி தேகம் சிறு போது நீங்க, தேகம் ஓய்வுறும்; தூய அமைதியில் தங்கி துயிலும். 3. பாதம் உதயத்தை நோக்கி சோர்ந்த தேகம் துயிலும் உயிர்த்தெழும் மாட்சி நாளின் வரைக்கும். 4. ஆவியோ தியானம் மூழ்கி ஆவலாய் செய் விண்ணப்பம் கீதமாய் உயிர்க்கும் நாளில் பாடிடும்.

Uyirthelum Kaalai Thannil – உயிர்த்தெழும் காலை தன்னில் Read More »

Oh Erusalaemiyaarae – ஓ எருசலேமியாரே

1. ஓ, எருசலேமியாரே விழியுங்கள் மெய்மார்க்கத்தாரே இப்பாதி ராத்திரியிலே பர்த்தா வாறார்; வேகமாக எழுந்திருங்கள் புத்தியாக இருக்கும் கன்னிகள் எங்கே? தீவர்த்திகளையே எடுத்தெதிர்கொண்டே போம் நேரமாம், என்றிரவில் அலங்கத்தில் நிற்பாரின் கூக்குரல் உண்டாம். 2. சீயோனாகிய மனைவி சந்தோஷம் மனதில் பரவி விழித்தெழுந்திருக்கிறாள் அவள் நேசர் மேன்மையோடும் சிநேகத்தோடும் தயவோடும் வெளிப்படுகிறதினால் கிலேசம் நீங்கிற்று; ஆ ஸ்வாமீ, உமக்கு ஓசியன்னா! அடியாரும் கம்பீரிக்கும் கதிக்குச் செல்வோமே, கர்த்தா. 3. சுரமண்டலங்களாலும், நரர் சுரர்கள் நாவினாலும், துதிக்கப்பட்டோர் தேவரீர்

Oh Erusalaemiyaarae – ஓ எருசலேமியாரே Read More »

Thukkam Thegil Irul Soola – துக்கம் திகில் இருள் சூழ

துக்கம் திகில் இருள் சூழ மோட்ச யாத்திரை செய்கிறோம் கீதம்பாடி முன்னே நோக்கி மோட்ச பாதை செல்கிறோம் இருள் சூழ்ந்தும் பிரகாசிக்கும் தீப ஸ்தம்ப ஜோதியும் வீரமாக ஐக்கியமாக முன்னே செல்வோம் ராவிலும் பக்தரோடு தங்கிச் செல்லும் தெய்வமாம் ஒளி ஒன்றே இருள் நீங்க அச்சம் நீங்கும் பாதை முற்றும் பகலே எங்கள் ஜீவ நோக்கம் ஒன்றே குன்றா விசுவாசமும் எங்கள் ஊக்க வாஞ்சை ஒன்றே ஒன்றே என் நம்பிக்கையும் மோட்சம் செல்லும் கோடிப்பேரும் பாடும் பாட்டு

Thukkam Thegil Irul Soola – துக்கம் திகில் இருள் சூழ Read More »

Deiva Kirubayai Theda – தெய்வ கிருபையைத் தேட

1. தெய்வ கிருபையைத் தேட நீ போராடிக் கொண்டிரு, ஆவி பாரமின்றி ஏற நன்றாய் ஜாக்கிரதைப்படு. 2. வாசல் மிகவும் இடுக்கம் தாழ்மையாகி உட்படு; ஜீவனின் வழி நெருக்கம், லோக நேசத்தை விடு. 3. சேவகத்தில் பின் வங்காமல் ராஜ்ஜியத்துக் குட்படு; பேய் எதிர்த்தால், தளராமல் நின்று, ஏகிக்கொண்டிரு. 4. பக்தி முழு லோகத்துக்கும் உன்னை நீங்கலாக்கவே பார்த்துக்கொள், பங்கிட்டிருக்கும் நேசம்ஸ்வாமிக் கேற்காதே. 5. வேண்டுதலினால் போராடி, ஆண்டவரின் தயவு காணுமட்டுக்கும் மன்றாடி, கூப்பிட்டுக் கொண்டேயிரு. 6.

Deiva Kirubayai Theda – தெய்வ கிருபையைத் தேட Read More »

Yuththam Seivom Vaarum – யுத்தம் செய்வோம் வாரும்

1. யுத்தம் செய்வோம், வாரும் கிறிஸ்து வீரரே! இயேசு சேனை கர்த்தர் பின்னே செல்வோமே! வெற்றி வேந்தராக முன்னே போகிறார் ஜெயக் கொடி ஏற்றி போர் நடத்துவார். யுத்தம் செய்வோம் வாரும், கிறிஸ்து வீரரே! இயேசு சேனை கர்த்தர் பின்னே செல்வோமே! 2. கிறிஸ்து வீரர்காள், நீர் வெல்ல முயலும் பின்னிடாமல் நின்று ஆரவாரியும்! சாத்தான் கூட்டம் அந்த தொனிக்கதிரும் நரகாஸ்திவாரம் அஞ்சி அசையும்! 3. கிறிஸ்து சபை வல்ல சேனை போன்றதாம் பக்தர் சென்ற பாதை

Yuththam Seivom Vaarum – யுத்தம் செய்வோம் வாரும் Read More »

Vin Kireedam Pera – விண் கிரீடம் பெற

1.விண் கிரீடம் பெறப் போருக்குக் கிறிஸ்தேசு செல்கின்றார்; அவரின் வெற்றிக் கொடிக்குக் கீழாகப் போவோன் யார்? தன் துக்கப் பாத்ரம் குடித்துச் சோராமல் நிற்போன் யார்? தன் சிலுவையை எடுத்து அவர் பின் செல்வோன் யார்? 2.முதலாம் ரத்த சாட்சியாய் மரித்தோன், வானத்தில் கர்த்தாவை விசுவாசமாய்க் கண்ணோக்கித் துன்பத்தில் கொலைஞர்க்காக வேண்டிட, சண்டாளரால் மாண்டான்; பகைஞர்க்காக ஜெபிக்க யார் அவர் பின் செல்வான்? 3.தெய்வாவி வந்து தங்கின ஈராறு சீஷர்கள், மகத்வமாய் விளங்கின நம்பிக்கை யுள்ளோர்கள், தீ,

Vin Kireedam Pera – விண் கிரீடம் பெற Read More »

Athisayangalai Ella Idamum – அதிசயங்களை எல்லா இடமும்

1. அதிசயங்களை எல்லா இடமும் செய்யும் கர்த்தாவை, வாக்கினால் இருதயத்திலேயும் துதியுங்கள்; அவர் நாம் ஜென்மித்த நாளே முதல் இம்மட்டுக்கும் இரக்கம் செய்தாரே. 2. நர தயாபரர் முடிய ஆதரித்து, நற்சமாதானத்தால் மகிழ்ச்சியை அளித்து, தயையை நம்முட மேல் வைத்தெந்நேரமும் ரட்சித்து, தீமையை எல்லாம் விலக்கவும். 3. உன்னதமாகிய விண்மண்டலத்திலுள்ள, மாறாத உண்மையும் தயையும் அன்புள்ள பிதா சுதனுக்கும் திவ்விய ஆவிக்கும் எத்தேச காலமும் துதி உண்டாகவும்.

Athisayangalai Ella Idamum – அதிசயங்களை எல்லா இடமும் Read More »

Aathumavae Theenguku thappa – ஆத்துமாவே தீங்குக்குத் தப்ப

1.ஆத்துமாவே, தீங்குக்குத் தப்பத் தக்கதாக, நீ விழித்துத் தொழுது கெஞ்சிக் கொள்வாயாக; ஏனென்றால் சாத்தானால் உனக்கெந்தத் திக்கும் சோதனைகள் நிற்கும். 2.உன்னில் பாவ நித்திரை முன் தெளிய வேண்டும்; பாவ நஞ்சின் இனிமை, தேடும் உன்னை மீண்டும், விலகு, சீர்ப்படு; சாவுன்னை மெய்யாகச் சேரும், தூங்காயாக. 3.நீ விழித்தெழுந்திரு, மோசத்தை விட்டோடு, கண் தெளிய, அதற்கு நீ கலிக்கம் போடு; இவ்விதம் ஆத்துமம் கர்த்தரால் தாயையும் ஒளியும் அடையும். 4.என்றாலும் பிசாசினி சோதிக்க ஓயாதே என்றறிந்து நீ

Aathumavae Theenguku thappa – ஆத்துமாவே தீங்குக்குத் தப்ப Read More »

En Aandava Ipporil – என் ஆண்டவா இப்போரில்

என் ஆண்டவா, இப்போரில் நான் விழாது இம் பிரசன்னத்தால் நெருங்கி என்னைத் தாங்கிடும் நேராய் நடத்தும் உம் அன்பால் என் ஆவல் என்றும் உம்மிலே என்றாலும் என்னைச் சூழ்ந்திடும் பிசாசு மாம்சம் லோகத்தால் மாளாது பெலன் தந்திடும் ஐயோ, நான் பெலவீனனே ஓயாது வீழ்ந்து சாகின்றேன் என் இயேசுவே என் ஜீவனே உன் பாதம் தஞ்சம் அண்டினோம் நற் போராட்டம் போராடிட ஓட்டத்தை உம்மில் முடிக்க விண் கிரீடம் பெற்று பாடிட விடாது தாங்கி நடத்தும்

En Aandava Ipporil – என் ஆண்டவா இப்போரில் Read More »

Kartharai Entrumae Pin – கர்த்தரை என்றுமே பின்

கர்த்தரை என்றுமே பின் செல்லும் சீஷன் எத்தோல்வி தீங்குமே மேற்கொள்ளும் வீரன் எப்பயமுமின்றியே தான் கொண்ட எண்ணமே விடானே என்றுமே மோட்சம் செல்லுவோன் திகில் உண்டாக்குவார் கோர கதையால் தாமே தத்தளிப்பார் வீரன் ஊற்றத்தால் மாற்றாரை மடக்கி ராட்சதர் அடக்கி காட்டிடுவான் சக்தி மோட்சம் செல்லுவோன் கர்த்தா நீர் காத்திட தூய ஆவியால் பெறுவேன் நித்திய ஜீவன் முடிவில் வீண் எண்ணம் ஓடிடும் வீண் பயம் நீங்கிடும் முயற்சிப்பேன் என்றும் மோட்சம் செல்லுவேன்

Kartharai Entrumae Pin – கர்த்தரை என்றுமே பின் Read More »

Jeyitha Yesu Naathar Thaam – ஜெயித்த இயேசு நாதர்தாம்

ஜெயித்த இயேசு நாதர்தாம் சம்பாதித்த மெய் ஆஸ்தியாம் சாகாத ஜீவன் பூரிப்பும் நமக்கென்றைக்கும் கிடைக்கும் பயமும் நோவும் இயேசுவால் முற்றும் விலகிப் போவதால் சந்தோஷமாய்ப் போராடுவோம் அவரால் வெற்றி கொள்ளுவோம் சாமட்டும் நிலைநின்றவன் போராட்டம் செய்து வென்றவன் வானோரின் சங்கம் சேருவான் தன் மீட்பரோடு வாழுவான் வெற்றி சிறந்த தேவரீர் ஜெயிக்கப் பாதை காண்பித்தீர் நீர் வென்ற வண்ணம் நாங்களும் வென்றேறத் தயை அருளும்

Jeyitha Yesu Naathar Thaam – ஜெயித்த இயேசு நாதர்தாம் Read More »

Aandava Pirasannamaaki – ஆண்டவா பிரசன்னமாகி

1. ஆண்டவா பிரசன்னமாகி ஜீவன் ஊதி உயிர்ப்பியும்; ஆசை காட்டும் தாசர்மீதில் ஆசீர்வாதம் ஊற்றிடும் அருள்மாரி எங்கள் பேரில் வருஷிக்கப் பண்ணுவீர் ஆசையோடு நிற்கிறோமே ஆசீர்வாதம் ஊற்றுவீர். 2. தேவரீரின் பாதத்தண்டை ஆவலோடே கூடினோம் உந்தன் திவ்விய அபிஷேகம் நம்பி நாடி அண்டினோம். 3. ஆண்டவா, மெய்பக்தர் செய்யும் வேண்டுகோளைக் கேட்கிறீர் அன்பின் ஸ்வாலை எங்கள் நெஞ்சில் இன்று மூட்டி நிற்கிறீர். 4. தாசர் தேடும் அபிஷேகம் இயேசுவே! கடாட்சியும் பெந்தெ கொஸ்தின் திவ்விய ஈவை தந்து

Aandava Pirasannamaaki – ஆண்டவா பிரசன்னமாகி Read More »