Uncategorized

En Nenjjai Swami Umakae – என் நெஞ்சை ஸ்வாமீ உமக்கே

1. என் நெஞ்சை, ஸ்வாமீ, உமக்கே ஈவாய்ப் படைக்கிறேன்; நீர் இந்தக் காணிக்கையையே கேட்டீர் என்றறிவேன் 2. என் மகனே, உன் நெஞ்சைத் தா, நீ இக்கடனைத் தீர்; வேறெங்கும் நீ சுகப்பட மாட்டாயே” என்கிறீர். 3. அப்பா, நீர் அதைத் தயவாய் அங்கீகரிக்கவும், நான் அதை உள்ளவண்ணமாய் தந்தேன், அன்பாயிரும் 4. மெய்தானே, அது தூய்மையும் நற்சீரு மற்றது; அழுக்கும் தீட்டும் மாய்கையும் அதில் நிரம்பிற்று. 5. நான் உண்மையாய்க் குணப்பட அதை நொறுக்குமேன்; இத் […]

En Nenjjai Swami Umakae – என் நெஞ்சை ஸ்வாமீ உமக்கே Read More »

Karthaavai Nambuvorai – கர்த்தாவை நம்புவோரை

1.கர்த்தாவை நம்புவோரை ஓர்க்காலும் கைவிடார், பொல்லாரின் சீறுமாற்றை வீணாக்கிப் போடுவார்; சன்மார்க்கரைப் பலத்த கையால் தயாபரர் ரட்சித்துத் தாழ்ச்சியற்ற அன்பாய் விசாரிப்பார். 2.கர்த்தாவின் சித்தத்துக்கு கீழ்ப்பட்டடங்குவேன்; அப்போ நான் ஜீவனுக்கு நேரே நடக்கிறேன்; லௌகீக வாழ்வின் பாதை வேண்டாம், நான் இயேசுவை பின்பற்றி, இங்கே வாதை சகித்தால், மாநன்மை. 3. என்மேலே பாரமாக வரும் இக்கட்டிலே பராபரன் அன்பாக என்னோடிருப்பாரே; பொறுக்கிற வரத்தை அவரிடம் கேட்பேன், அவ்விதமாய் இக்கட்டை சகித்து வெல்லுவென். 4. கசப்பும் கர்த்தராலே வரும்,

Karthaavai Nambuvorai – கர்த்தாவை நம்புவோரை Read More »

Suththa Iruthayathai Neer – சுத்த இருதயத்தை நீர்

Suththa Iruthayathai Neer – சுத்த இருதயத்தை நீர் 1.சுத்த இருதயத்தை நீர்,கர்த்தாவே, என்னில் சிஷ்டியும்,திட ஆவியை, தேவரீர்,என் உள்ளத்தில் புதுப்பியும் 2.ஆ, உம்முடைய முகத்தைவிட்டென்னை நீர் தள்ளாமலும்,என்னிடத்தில் தெய்வாவியைபேர்த்தெடுக்காமலுமிரும். 3.மீண்டும் உமதிரட்சிப்பின்சந்தோஷத்தைத் தந்தருளும்;இனிப் புதிய ஆவியின்உற்சாகம் என்னைத் தாங்கவும்.

Suththa Iruthayathai Neer – சுத்த இருதயத்தை நீர் Read More »

Theeyor solvathai Kealamal – தீயோர் சொல்வதைக் கேளாமல்

1. தீயோர் சொல்வதைக் கேளாமல்பாவத்துக்கு விலகி,பரிகாசரைச் சேராமல்நல்லோரோடு பழகி,கர்த்தர் தந்த வேதம் நம்பிவாஞ்சை வைத்து, அதைத்தான்ராப் பகலும் ஓதும் ஞானிஎன்றும் வாழும் பாக்கியவான். 2. நதி ஓரத்தில் வாடாமல்நடப்பட்டு வளர்ந்து,கனி தந்து, உதிராமல்இலை என்றும் பசந்து,காற்றைத் தாங்கும் மரம்போலஅசைவின்றியே நிற்பான்;அவன் செய்கை யாவும் வாய்க்கஆசீர்வாதம் பெறுவான். 3. தீயோர், பதர்போல் நில்லாமல்தீர்ப்பு நாளில் விழுவார்;நீதிமான்களோடிராமல்நாணி நைந்து அழிவார்;இங்கே பாவி மகிழ்ந்தாலும்பாவ பலன் நாசந்தான்;நீதிமான் இங்கழுதாலும்கர்த்தர் வீட்டில் வாழுவான்.

Theeyor solvathai Kealamal – தீயோர் சொல்வதைக் கேளாமல் Read More »

Nal Meetparae Ummalae – நல் மீட்பரே உம்மேலே

1. நல் மீட்பரே, உம்மேலே என் பாவம் வைக்கிறேன்; அன்புள்ள கையினாலே என் பாரம் நீக்குமேன்; நல் மீட்பரே, உம்மேலே என் குற்றம் வைக்க, நீர் உம் தூய ரத்தத்தாலே விமோசனம் செய்வீர். 2. நல் மீட்பரே, உம்மேலே என் துக்கம் வைக்கிறேன்; இப்போதிம்மானுவேலே, எப்பாடும் நீக்குமேன் நல் மீட்பரே, உம்மேலே என் தீனம் வைக்க நீர் உம் ஞானம் செல்வத்தாலே பூரணமாக்குவீர். 3. நல் மீட்பரே, உம்பேரில் என் ஆத்மா சார, நீர் சேர்ந்து உம்

Nal Meetparae Ummalae – நல் மீட்பரே உம்மேலே Read More »

Parathin Jothiyae – பரத்தின் ஜோதியே

1. பரத்தின் ஜோதியே, என்மேல் இறங்கிடும் பிரகாசத்துடனே உள்ளத்தில் விளங்கும் நீர் ஜீவ ஜோதி, தேவரீர் நற் கதிர் வீசக்கடவீர். 2. நிறைந்த அருளால் லௌகீக ஆசையை அகற்றி, ஆவியால் பேரின்ப வாஞ்சையை வளர்த்து நித்தம் பலமாய் வேரூன்றச் செய்யும் தயவாய். 3. நீர் என்னை ஆளுகில், நான் வாழ்ந்து பூரிப்பேன் நீர் என்னை மறக்கில் நான் தாழ்ந்து மாளுவேன் என் ஊக்கம் ஜீவனும் நீரே, கடாட்சம் செய்யும் கர்த்தரே. 4. தெய்வன்பும் தயவும் உம்மாலேயே உண்டாம்

Parathin Jothiyae – பரத்தின் ஜோதியே Read More »

Maasillamal Thooyathaana – மாசில்லாமல் தூயதான

(1-ஆம் பாகம்) 1. மாசில்லாமல் தூயதான பளிங்கிலேயும் தெளிவான சுத்தாங்க ஊற்றே, இயேசுவே; கேரூபீங்கள் தூய சீரின் பிரகாசம் யாவுந் தேவரீரின் முன்பாக மங்கிப்போகுதே; என் பாவத்தின் இருள் அனைத்தும் உமக்குள் தொலையட்டும்; ஆ, இயேசுவே, நான் உமக்கே ஒப்பாய் சுத்தாங்கமாகவும். 2. மனசார சாவுமட்டும் “பிதாவின் சித்தமே ஆகட்டும்” என்றீர், அமர்ந்த இயேசுவே; என் மனமும் “தெய்வ சித்தம் என் நன்மை,” என்றதற்கு நித்தம் கீழ்ப்பட்டடங்க, உம்மையே பின்பற்ற, தேவரீர் சகாயம்பண்ணுவீர்; எந்நோவிலும், என் இயேசுவே,

Maasillamal Thooyathaana – மாசில்லாமல் தூயதான Read More »

Balaveenarin Balamum – பலவீனரின் பலமும்

பலவீனரின் பலமும் துக்கப்பட்டிருக்கிற பாவிகளுட திடனும் வைத்தியருமாகிய இயேசுவே, என் எஜமானே கேட்டை நீக்கும் பலவானே என் இதயம் ஜென்ம பாவம் ஊறிய ஊற்றானது முழுவதும் என் சுபாவம் நன்மையை விரோதித்து பாவத்தின் விஷத்தினாலும் நிறையும் துர் இச்சையாலும் ஆத்தும பகைஞராலே காயப்பட்டுப் போன நான் உம்மண்டைக்கு வாஞ்சையாலே ஓடிச்சேருமுன்னேதான் பேய் தன் கூட்டத்துடனேயும் என்னில் மீளவும் அம்பெய்யும் செய்ய வேண்டிய ஜெபத்தை அசதி மறித்திடும் உமதாவி ஆத்துமத்தை நன்மைக்கேவுவதற்கும் வரும்போதெதிர்க்கும் மாமிசம் அதைத் தடுக்கும் நோயாம்

Balaveenarin Balamum – பலவீனரின் பலமும் Read More »

Arul Maari Engumaaga – அருள் மாரி எங்குமாக

1. அருள் மாரி எங்குமாக பெய்ய அடியேனையும் கர்த்தரே நீர் நேசமாக சந்தித்தாசீர்வதியும் என்னையும் என்னையும் சந்தித்தாசீர்வதியும் என்னையும் என்னையும் சந்தித்தாசீர்வதியும். 2. என் பிதாவே, பாவியேனை கைவிடாமல் நோக்குமேன் திக்கில்லா இவ்வேழையேனை நீர் அணைத்துக் காருமேன் என்னையும் என்னையும் நீர் அணைத்துக் காருமேன் என்னையும் என்னையும் நீர் அணைத்துக் காருமேன் 3. இயேசுவே நீர் கைவிடாமல் என்னைச் சேர்த்து ரட்சியும் ரத்தத்தாலே மாசில்லாமல் சுத்தமாக்கியருளும் என்னையும் என்னையும் சுத்தமாக்கியருளும் என்னையும் என்னையும் சுத்தமாக்கியருளும் 4. தூய

Arul Maari Engumaaga – அருள் மாரி எங்குமாக Read More »

Arpa Vaalvai Vanjiyaamal – அற்ப வாழ்வை வாஞ்சியாமல்

அற்ப வாழ்வை வாஞ்சியாமல் இன்பம் செல்வம் பின்பற்றாமல் தெய்வ நேசத்தை ஓயாமல் நாடுவாய், நாடுவாய் விரும்பாதே பேர் பிரஸ்தாபம் லோக மகிமை பிரதாபம் ஆத்ம வாழ்வின் நித்திய லாபம் நாடுவாய், நாடுவாய் நாடுவாய், தெய்வாசிர்வாதம் கர்த்தர் ஈயும் சற்பிரசாதம் பாவம் தீரத் திருப்பாதம் நாடுவாய், நாடுவாய், மீட்பர் போல் சுத்தாங்கமாக தாழ்மையோடு சாந்தமாக தொண்டு செய்ய ஆவலாக நாடுவாய், நாடுவாய், பிறர் இயேசுவண்ட சேர அவராலே கடைத்தேற தெய்வ சித்தம் நிறைவேற நாடுவாய், நாடுவாய், அருள் நாதர்

Arpa Vaalvai Vanjiyaamal – அற்ப வாழ்வை வாஞ்சியாமல் Read More »

Aa Yesuvae Naan Boomiyil – ஆ இயேசுவே நான் பூமியில்

1.ஆ இயேசுவே, நான் பூமியில் உயர்த்தப்பட்டிருக்கையில் எல்லாரையும் என் பக்கமே இழுத்துக்கொள்வேன் என்றீரே. 2.அவ்வாறென்னை இழுக்கையில், என் ஆசை கெட்ட லோகத்தில் செல்லாமல்; பாவத்தை விடும், அநந்த நன்மைக்குட்படும். 3.தராதலத்தில் உம்முடன் உபத்திரவப்படாதவன் உம்மோடு விண்ணில் வாழ்ந்திரான்; சகிப்பவன் சந்தோஷிப்பான். 4.பிதாவின் வீட்டில் தேவரீர் ஸ்தலம் ஆயத்தம் செய்கிறீர்; அங்கே வசிக்கும் தூயவர் இக்கட்டும் நோவும் அற்றவர்.

Aa Yesuvae Naan Boomiyil – ஆ இயேசுவே நான் பூமியில் Read More »

Aaraainthu Paarum Karthavae – ஆராய்ந்து பாரும் கர்த்தரே

1. ஆராய்ந்து பாரும், கர்த்தரே , என் செய்கை யாவையும் நீர் காணுமாறு காணவே என்னில் பிரகாசியும் . 2. ஆராயும் எந்தன் உள்ளத்தை நீர் சோதித்தறிவீர் ; என் அந்தரங்க பாவத்தை மா தெளிவாக்குவீர். 3. ஆராயும் சுடரொளியால் தூராசை தோன்றவும் ; மெய் மனஸ்தாபம் அதனால் உண்டாக்கியருளும் . 4. ஆராயும் சிந்தை, யோசனை எவ்வகை நோக்கமும் , அசுத்த மனோபாவனை உள்ளிந்திரியங்களும். 5. ஆராயும் மறைவிடத்தை உமா தூய கண்ணினால் ; ஆரோசிப்பேன்

Aaraainthu Paarum Karthavae – ஆராய்ந்து பாரும் கர்த்தரே Read More »