Uncategorized

Unthan Sonthamaakkineer – உந்தன் சொந்தமாக்கினீர்

1. உந்தன் சொந்தமாக்கினீர் அடியேனை நோக்குவீர் பாதுகாரும் இயேசுவே என்றும் தீங்கில்லாமலே 2. நான் உம் சொந்தம், லோகத்தில் மோட்ச யாத்திரை செய்கையில் ஜீவன், சத்தியம், வழியும் நீரே, ரட்சித்தாண்டிடும் 3. நான் உம் சொந்தம் ரட்சியும் மட்டில்லாத பாக்கியமும் அருள் நாதா, நல்கினீர் இன்னமும் காப்பாற்றுவீர். 4. நான் உம் சொந்தம் நித்தமாய் தாசனை நீர் சுகமாய் தங்கச் செய்து, மேய்ப்பரே காத்தும் மேய்த்தும் வாருமே. 5. நான் உம் சொந்தம், தேவரீர் வழி காட்டிப் […]

Unthan Sonthamaakkineer – உந்தன் சொந்தமாக்கினீர் Read More »

En Aavi Aanmaa Degamum – என் ஆவி ஆன்மா தேகமும்

1.என் ஆவி ஆன்மா தேகமும் இதோ படைக்கிறேன்; என்றும் உம் சொந்தமாகவும் பிரதிஷ்டை செய்கிறேன். 2.ஆ, இயேசு, வல்ல ரட்சகா உம் நாமம் நம்புவேன்; ரட்சிப்பீர், மா தயாபரா, உம் வாக்கை வேண்டுவேன். 3.எப்பாவம் நீங்க, உறுப்பு தந்தேன் சமூலமாய்; போராட்டம் வெற்றி சிறப்பு படைக்கலங்களாய். 4.நான் உம்மில் ஜீவித்தல் மகா மேலான பாக்கியம்; தெய்வ சுதா, என் ரட்சகா, என் ஜீவனாயிரும். 5.என் நாதா, திரு ரத்தத்தால் சுத்தாங்கம் சொந்தமே; ஆனேன்! உம் தூய ஆவியால்

En Aavi Aanmaa Degamum – என் ஆவி ஆன்மா தேகமும் Read More »

Ulagathaiye Mei silirkavaithaar – உலகத்தையே மெய் சிலிர்க்கவைத்தார்

Ulagathaiye Mei silirkavaithaarAvar Saavai Vendra Veeranaaga Jeyithezhundhaar.. 2 Pissaasu Vetkapattaan icheidhiyai Ninaithu 2Maranthai Vendra Dhevan Arpudhamaanavar 2Yudha Raja Singam Meendum Vandhaar. Pidhaavin Sithabadi Namakaai Avar Uyirthaar (2)Magizhchiyin Utchathiley Meetparai Paaduvom (2)

Ulagathaiye Mei silirkavaithaar – உலகத்தையே மெய் சிலிர்க்கவைத்தார் Read More »

Paavi Kel Un Aandavar – பாவி கேள் உன் ஆண்டவர்

1. பாவி கேள்! உன் ஆண்டவர் அறையுண்ட ரக்ஷகர், கேட்கிறார், என் மகனே, அன்புண்டோ என் பேரிலே? 2. நீக்கினேன் உன் குற்றத்தை, கட்டினேன் உன் காயத்தை, தேடிப்பார்த்து ரக்ஷித்தேன், ஒளி வீசப்பண்ணினேன். 3. தாயின் மிக்க பாசமும் ஆபத்தாலே குன்றினும், குன்றமாட்டாதென்றுமே ஒப்பில்லா என் நேசமே. 4. எனதன்பின் பெருக்கும் ஆழம் நீளம் உயரமும் சொல்லிமுடியாது, பார்! என்னைப் போன்ற நேசனார்? 5. திவ்விய ரூபம் தரிப்பாய், என்னோடரசாளுவாய்! ஆதலால் சொல், மகனே, என்புண்டோ என்

Paavi Kel Un Aandavar – பாவி கேள் உன் ஆண்டவர் Read More »

Vaa Paavi Illaippaara Vaa – வா பாவி இளைப்பாற வா

1. வா, பாவி, இளைப்பாற வா, என் திவ்விய மார்பிலே நீ சாய்ந்து சுகி, என்பதாய் நல் மீட்பர் கூறவே; இளைத்துப்போன நீசனாய் வந்தாறித் தேறினேன்; என் பாரம் நீங்கி, இயேசுவால் சந்தோஷமாயினேன். 2. வா, பாவி, தாகந்தீர வா, தாராளமாகவே நான் ஜீவ தண்ணீர் தருவேன், என்றார் என் நாதரே; அவ்வாறு ஜீவ ஊற்றிலே நான் பானம்பண்ணினேன்; என் தாகம் தீர்ந்து பலமும் பேர் வாழ்வும் அடைந்தேன். 3. வா, பாவி, இருள் நீங்க வா;

Vaa Paavi Illaippaara Vaa – வா பாவி இளைப்பாற வா Read More »

Arulin Poludhaana – அருளின் பொழுதான

1.அருளின் பொழுதான அன்புள்ள இயேசுவே, நரரின் ஜீவனான உம்மாலே என்னிலே வெளிச்சமுங் குணமும் சந்தோஷமும் திடமும் வரக் கடவது. 2.என் பாவத்தை மன்னித்து அகற்றியருளும்; சினத்தை விட்டு விட்டு என்மேல் அன்பாயிரும். என் நெஞ்சின் பயமற, நீர் சமாதானங் தரப் பணிந்து கேட்கிறேன். 3.அடியானை மீட்டோரே, நான் உம்மைச் சேவித்து தெய்வீக பக்தியோடே நடக்கிறதற்கு என் சிந்தையை முறித்து, புதியதாய்ச் சிஷ்டித்து, படைத்துக் கொண்டிரும். 4.நான் உம்மைச் சார்ந்தோனாக எப்போதும் உண்மையில் நிலைக்கிறதற்காக, நீர் எனக்கறிவில் வளர்ச்சி

Arulin Poludhaana – அருளின் பொழுதான Read More »

Yesuvae Ummai yallamal – இயேசுவே உம்மையல்லாமல்

இயேசுவே உம்மையல்லாமல் நாங்கள் மாநிர்பாக்கியர் எந்த நன்மையுமில்லாமல் கெட்டுப் போன மானிடர் நாங்கள் பாவ இருளாலே அந்தகாரப்பட்டவர் சர்ப்பத்தின் விஷத்தினாலே தாங்கா நோய் பிடித்தவர் இந்தக் கெட்ட லோகம் எங்கும் பாவக்கண்ணி மிகுதி தேவரீராலன்றி யாரும் தப்பி வாழ்வதெப்படி இயேசுவே, பலத்தைத் தந்து அந்தகாரம் அகற்றும் ஞானக்கண்ணைத் தெளிவித்து எங்கள் மேல் பிரகாசியும்

Yesuvae Ummai yallamal – இயேசுவே உம்மையல்லாமல் Read More »

En Paavathin Nivarthiyai -என் பாவத்தின் நிவர்த்தியை

1. என் பாவத்தின் நிவர்த்தியை உண்டாக்க, அன்பாய் ஜீவனை கொடுத்து, சிலுவையிலே மரித்த தெய்வ மைந்தனே 2. அநேக பாவம் செய்தோனாய் மா ஏழையும் நசலுமாய் ராப்போஜனத்துக்கு வரும் அடியேனைத் தள்ளாதேயும் 3. நீர் பாவியின் இரட்சகர், நீர் யாவையும் உடையவர், நீர் பரிகாரி, நீர் எல்லாம், குணம் வரும் உம்மாலேயாம். 4. ஆகையினால், என் இயேசுவே, குணம் அளியும், என்னிலே அசுத்தமான யாவையும் நிவர்த்தியாக்கியருளும் 5. இருண்ட நெஞ்சில் ஒளியும் மெய்யான விசுவாசமும் தந்து, என்

En Paavathin Nivarthiyai -என் பாவத்தின் நிவர்த்தியை Read More »

Swamiyae Naan Eththanai – ஸ்வாமியே நான் எத்தனை

1. ஸ்வாமியே, நான் எத்தனை பாவ பாதகங்களை செய்து வந்தேன் என்று நீர் நன்றாய்த் தூண்டிக் காட்டுவீர். 2. ஐயோ! பாவ தோஷத்தால் கெட்டுப்போனேன், ஆதலால் நித்தம் வாடி நோகிறேன், துக்கத்தால் திகைக்கிறேன். 3. நெஞ்சு என்னைக் குத்தவும், துன்பம் துயர் மிஞ்சவும், ஆவியும் கலங்கிற்றே, கண்ணீர் பாய்ந்து ஓடிற்றே. 4. வெட்கம் கொண்ட அடியேன் துக்கமுள்ளோனாய் வந்தேன், ஸ்வாமி, என்னைச் சாலவும் தேற்றி மன்னித்தருளும்.

Swamiyae Naan Eththanai – ஸ்வாமியே நான் எத்தனை Read More »

Thaalvilirunthu Koopidum – தாழ்விலிருந்து கூப்பிடும்

1.தாழ்விலிருந்து கூப்பிடும் என் சத்தங் கேட்டன்பாக என் அழுகை அனைத்துக்கும் செவி கொடுப்பீராக; கர்த்தாவே, பாவக் குற்றத்தை நீர் மன்னியாமல், நீதியைப் பார்த்தால் யார் நிற்கக்கூடும். 2.மன்னிப்பை எவனானிலும் தன் புண்ணியங்களாலே அடையான்; உம்மை யாவரும் தாழ்வான மனத்தாலே பணிந்து பயப்படவே, மனத்தரிதிரருக்கே மன்னிக்கிறீர், கர்த்தாவே. 3.நான் கர்த்தரைக் கண்ணோக்குவேன், என் புண்ணியம் அவத்தம்; தெய்வன்பையே நான் நம்புவேன்; அதற்கு வாக்குத்தத்தம் மெய்யான வேதவார்த்தையில் உண்டாமே, நான் என்மனத்தில் அதற்குக் காத்திருப்பேன். 4.ராச்சாமங் காப்பவர், எப்போ விடியும்

Thaalvilirunthu Koopidum – தாழ்விலிருந்து கூப்பிடும் Read More »

Naangal Paava Paarathaal – நாங்கள் பாவப் பாரத்தால்

1. நாங்கள் பாவப் பாரத்தால் கஸ்தியுற்றுச் சோருங்கால் தாழ்மையாக உம்மையே நோக்கி, கண்ணீருடனே ஊக்கத்தோடு வாஞ்சையாய் கெஞ்சும்போது, தயவாய் சிந்தை வைத்து, இயேசுவே எங்கள் வேண்டல் கேளுமே. 2. மோட்சத்தை நீர் விட்டதும், மாந்தனாய்ப் பிறந்ததும் ஏழையாய் வளர்ந்ததும், உற்ற பசி தாகமும், சாத்தான் வன்மை வென்றதும் லோகம் மீட்ட நேசமும் சிந்தை வைத்து, இயேசுவே, எங்கள் வேண்டல் கேளுமே. 3. லாசருவின் கல்லறை அண்டை பட்ட துக்கத்தை சீயோன் அழிவுக்காய் நீர் விட்ட சஞ்சலக் கண்ணீர்

Naangal Paava Paarathaal – நாங்கள் பாவப் பாரத்தால் Read More »

Naan Engae Ooduvean – நான் எங்கே ஓடுவேன்

1.நான் எங்கே ஓடுவேன், மா பாதகனானேன், தீட்பெங்கும் என்னை மூடும், யார் ஆத்ரிக்கக் கூடும்; என் திகில் லோகத்தார்கள் அனைவருடத நீக்கார்கள். 2.அன்புள்ள, இயேசுவே, வா என்று சொன்னீரே, என் மனமும்மைப் பற்றும்; என் க்லேகமும் இக்கட்டும் தணிய, தயவாகத் திடன் அளிப்பீராக. 3.என் பாவத்தால் உண்டாம் விசாரத்தோ டெல்லாம் நான் எனக்காய் மடிந்த உம்மண்டையே பணிந்த ஜெபத்தியானமாக வந்தேன், ரட்சிப்பீராக. 4.சிந்துண்ட உம் வல்ல இரத்தத்தால் எல்லா அழுக்கும் என்னில் வாங்கும், என் நோயில் என்னைத்தாங்கும்;

Naan Engae Ooduvean – நான் எங்கே ஓடுவேன் Read More »