கசையடி காயங்கள் கடுந்துயர் – Kasaiyadi Kayangal Kadunthuyar

கசையடி காயங்கள் கடுந்துயர் – Kasaiyadi Kayangal Kadunthuyar

கசையடி காயங்கள், கடுந்துயர் வேதனைகள் – 2
தந்தேனே.. தந்தேனே – தந்தையே மன்னியும் – 2
இயேசையா.. இயேசையா எனக்காய் மரித்தீரே – 2

  1. பலநாளாய் உறவாடி மகிழ்ந்தவரை காணவில்லை – 2
    பகல் இரவாய் போதனைகள் கேட்டிருந்தும் மனம் மாறவில்லை
    விழித்திருந்து ஜெபிக்கும் நேரத்திலே – உம் வியர்வைகள், இரத்தமாய் மாறினதே
    தனியாளாய், சிலுவையினை, சுமந்தீரே உயர் துறந்தீரே – 2 கசையடி
  2. மாட்சியினை துறந்தீரே, மனிதரை அன்பு செய்ததாலே – 2
    மதியாத உயிர்களுக்காய் மரச்சிலுவை மரணமேனோ
    “கொல்லும் ” என்று கோஷமிட்டும் – அந்த கொடுமையை மன்னித்தீர்
    வியாகுலத்தாயின் விழிநீரில் கரைந்தீரே அன்பில் கலந்தீரே – 2 கசையடி

Tamil Christian Passion Lenten Songs