சுந்தர பராபரனே பரி சுத்தன் 
கிறிஸ்தேனும் நித்தியனே
மைந்தனைப் பிறந்தீரோ சுவாமி 
மாங்கிஷத்தில் உருவாணீரோ
வான தூதர் போற்றிடவே உண்மை 
வாழ்த்தி புகழ்ந்து கொண்டேந்திடவே 
காணத்தொனி ஏற்றுருந்த சுவாமி 
காட்டு மடத்தில் உதித்ததென்ன ?
ஆசை மிகு ஆபிரகாம் உரு – வாகும் முன் 
விண்தல மீதிருந்தும் 
நேசமுடன் பிள்ளை தந்தும் அந்த
நீதிமான் வங்கிஷம் ஆனதென்ன?
பொங்கு பாவ நாசனனே விண்ணோர்? – போற்றிப்
புகழ்ஞ் சிம்மசானனே 
தங்குதற்கிடம் இல்லையோ – சுவாமி
தாபரிக்க ஒரு ஊர் இல்லையோ ?

