கதை சொல்லவா ஒரு கதை சொல்லவா
சிறு விதைபோல நீயல்லவா 
இயேசு மகா ராஜ பிதா 
உவமானம் அதை சொல்லவா
ஒரு நாள் ஒரு விதைக்கின்றவன்
பதமான விதை எடுத்தான் 
பயிர் செய்யவே பரவசமாய் 
விதைகளை தூவ சென்றான்
வழியருகே விழுந்த விதை
பறவைக்கு விருந்தாயிற்று
பாதையிலே விழுந்த விதை
பயனின்றி போய்விட்டது
முட்களிலே விழுந்த விதை
முள்ளாலே அழிவுண்டது
நல்ல நிலம் விழுந்த விதை
நூறாக பலன் தந்தது
உள்ளம் என்னும் நிலம் 
அதிலே அன்பென்னும் தத்துவத்தால்
அனுதினமும் வாழ்ந்து வந்தால்
எந்நாளும் ஆசீர்வாதம்

