பூவுலகின் பாவங்கள் போக்கிடவே 
விண்ணின் வேந்தன் மண்ணில் இன்று பிறந்தாரே 
நம் ஒப்பில்லாத தேவ மைந்தன் 
தாழ்மை ரூபம் எடுத்தாரே 
ஏழை கோலமாய் பிறந்தாரே
நாமும் வாழ்த்தி பாடுவோம்
கொண்டாடி மகிழ்வோம் 
சாஸ்டாங்கமாய் அவர் 
பாதம் பணிவோம்
நற்செய்தியை கேட்ட மேய்ப்பர்; ரட்சகரை
-காண நாடி 
நட்சத்திரத்தை பின்தொடர; சாஸ்திரிகளும் -விரைந்தோடி 
முன்னணை மீது பாலனை கண்டு; மகிழ்ந்தனரே -வியந்தனரே 
பொன் வெள்ளைப்போளம் 
– தூபவர்க்கம் ;படைத்தனரே பணிந்தனரே
தேவன் நம்மில் வைத்த ; அன்பை வெளிப்படுத்த 
நம் பாவம் நீக்கி ரட்சிக்க ; தம் சொந்த குமாரனை -நமக்கு ஈந்தார் 
அவர் போல அன்பை வெளிப்படுத்தும் ; நற்கிரியை -செய்திடுவோம் 
இயேசுவின் நாமம் உயர்த்திடும் ; சாட்சிகளாய் -வாழ்ந்திடுவோம்.

