Aayiram Madangu Asirvadham Promise Song Lyrics – ஆயிரம் மடங்கு ஆசீர்வாதங்கள்

Aayiram Madangu Asirvadham Promise Song Lyrics – ஆயிரம் மடங்கு ஆசீர்வாதங்கள்

ஆயிரம் மடங்கு ஆசீர்வாதங்கள் நம் ராஜாதி ராஜா தருவார்
சோர்ந்திட வேண்டாம் கலங்கிட வேண்டாம் தேவன் நம்மோடு இருப்பார்
(இந்த நாட்கள் நமது நாட்கள்
ஆயிரம் மடங்கு ஆசீர்வாதம்) -2

ஆயிரம் மடங்கு ஆசீர்வாதங்கள் நம் ராஜாதி ராஜா தருவார்
சோர்ந்திட வேண்டாம் கலங்கிட வேண்டாம் தேவன் நம்மோடு இருப்பார்

வானத்து திரளான நட்சத்திரம் போல உன் சந்ததியின் ஆசீர்வாதம்
எண்ணிமுடியா கடற்கரை மணல் போல் எதிர்காலத்தின் ஆசீர்வாதம்
ஆபிரகாமின் ஆசீர்வாதங்கள்
கிறிஸ்துவிலே நமக்கு உண்டு

இந்த நாட்கள் நமது நாட்கள் ஆயிரம் மடங்கு ஆசீர்வாதம்
இந்த நாட்கள் வரும் காலங்கள் ஆயிரம் மடங்கு ஆசீர்வாதம் -2

நீ போகின்ற இடங்கள் எல்லாவற்றிலும்
ஆண்டவர் உன்னோடு வருவார்
நீ எடுக்கின்ற முயற்சிகள் அனைத்திலும் இருந்து
ஜெயமே உனக்கு கொடுப்பார்
தாவீதின் தேவன் உன்னோடு இருந்து
ஆளுகை செய்ய வைப்பார்

(இந்த நாட்கள் வரும் காலங்கள் நாம்
ஆளுகை செய்கின்ற நாட்கள்) -2

ஆயிரம் மடங்கு ஆசீர்வாதங்கள் நம் ராஜாதி ராஜா கொடுத்தார்
சோர்ந்திட மாட்டேன் கலங்கிட மாட்டேன் தேவன் என்னோடு இருந்தார்

இந்த நாட்கள் உனது நாட்கள் ஆயிரம் மடங்கு ஆசீர்வாதம்
இந்த நாட்கள் நமது நாட்கள் ஆயிரம் மடங்கு ஆசீர்வாதம்
இந்த நாட்கள் குடும்ப நாட்கள் ஆயிரம் மடங்கு ஆசீர்வாதம்
இந்த நாட்கள் சபையின் நாட்கள் ஆயிரம் மடங்கு ஆசீர்வாதம்