பல்லவி
என்றைக்கு காண்பேனோ, என் ஏசு தேவா?
அனுபல்லவி
குன்றாத தேவ குமாரனைத் தானே நான் – என்
சரணங்கள்
1. பரகதி திறந்து, பாரினில் பிறந்து,
நரர் வடிவாய், வந்த ராஜ உல்லசானை. – என்
2. ஐந்தப்பம் கொண்டு அநேகருக்குப் பகிர்ந்து,
சிந்தையில் உவந்த வ சீகர சினேகனை. – என்
3. மாசிலாத நாதன், மாமறை நூலன்,
ஏசுவின் திருமுக தரிசனம் நோக்கி நான். – என்
என்றைக்கு காண்பேனோ -ENDRAIKKU Kaanbeno