Kanavilum Nanavilum Um Anbai song lyrics – கனவிலும் நனவிலும் உம் அன்பை

Kanavilum Nanavilum Um Anbai song lyrics – கனவிலும் நனவிலும் உம் அன்பை

கனவிலும் நனவிலும்
உம் அன்பை நான் உணர்கிறேன்
இந்த அன்புக்கு உலகினில்
நிகரேதும் இல்லை
அளவில்லா கிருபைகள்
அனுதினம் காண்கிறேன்
உம் முடிவில்லா இரக்கங்கள் இன்றி நானும் இல்லை

நிபந்தனை இல்லாமல் அன்பு வைத்து
அளவே இல்லாமல் என்னை நேசித்து
சிலுவையில் எனக்காக மரித்தெழுந்து
நாள்தோறும் நடத்துகின்றீர் உடனிருந்து

உம் அன்பொன்றே போதும் இயேசய்யா
எனக்கு வேறொன்றும் வேண்டாமய்யா
உம் அன்பொன்றே போதும் இயேசய்யா
அதற்கு இணையேதும் இல்லை ஐயா

நித்திய அன்பினால் எனை நேசிக்கின்ற
நீர் மாத்ரம் போதும் இயேசய்யா
நிரந்தர அன்பினால் எனை நேசிக்கின்ற
நீர் மாத்ரம் போதும் இயேசய்யா

1.நான் திரும்பும் திசைகளெல்லாம்
நல்லவராகவே இருக்கின்றீர்
எப்பக்கமும் நெருக்கப்பட்டாலும்
ஒடுங்கியே போகாமல் காக்கின்றீர்

2.நான் பெற்ற நன்மைக்கெல்லாம் காரணரே
நித்தமும் நெஞ்சில் என்னை சுமப்பவரே
தீங்கொன்றும் எனக்கில்லை உம் சார்பிலே
நன்றி சொல்லி சாய்ந்துக்கொள்வேன் உம் மார்பிலே
சாய்ந்திளைப்பாறிடுவேன் உம் மார்பி

Nithiya Anbu song