பாதகர்க் காய்ப்படும் பாடுகளை – Paatharkkaai padu Paadukalai

பாதகர்க் காய்ப்படும் பாடுகளை – Paatharkkaai padu Paadukalai

பாதகர்க் காய்ப்படும் பாடுகளைக் கண்ணால்
பாருங்கள் பாவையரே.

அனுபல்லவி

காதகன் பாவி யூதாஸ் காட்டிக்கொடுக்க விண்ணைக்
காட்டும் கல்வாரிமலைக் கோட்டில் நம் பிணையாளி – பாதகர்

சரணங்கள்

  1. பக்தர் பெருமான் இரு கைத்தலம் விரிக்கிறார்,
    பாவியைப் போல் வாதை மேவி உத்தரிக்கிறார்;
    பெத்தம் உளமனத்தார் கத்திக்கொக் கரிக்கிறார்,
    பேதை மரி தன்மார்பில் மோதி ஆகுலிக்கிறார். – பாதகர்
  2. கள்ளர், கயவர்பலர் துள்ளித் தூஷணிக்கிறார்,
    காடி கலந்தகடற் காளானைத் திணிக்கிறார்;
    வள்ளல் செவியுளைக்கும் வார்த்தைகள் பிணைக்கிறார்,
    மாறுபா டுள்ள ரபி மார்புறக் கணிக்கிறார். – பாதகர்
  3. கைவிட்ட தெனவென்று கலங்கிநின் றழுகிறார்,
    காயுநின் மலன்கோபத் தீயினில் முழுகிறார்,
    மையுற்ற கொலைஞர்க்காய் மன்றாடித் தொழுகிறார்;
    வானோர் அரசன் ஏழு வாக்கிய மொழிகிறார். – பாதகர்

4.மாலுற்ற திருவுடல் கீலற்று நழுவுதே,
மாற்றல ரிற்கொடிய கூற்றுயிர் பிழியுதே,
பாலுற்ற நறுவிலா வேல்பட்டுக் கிழியுதே,
பாணியும் குருதியும் தோணியே வழியுதே. – பாதகர்

Paatharkkaai padu Paadukalai song lyrics in english