Unnatha Anubavaththil Ennai song lyrics – உன்னத அனுபவத்தில் என்னை

Unnatha Anubavaththil Ennai song lyrics – உன்னத அனுபவத்தில் என்னை

உன்னத அனுபவத்தில் என்னை
அழைத்து சென்றிடுவீர்

தேவனே என் இயேசுவே ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
பெலனே என் கோட்டையே ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
அல்லேலூயா அல்லேலூயா

  1. கருவில் என்னை தெரிந்து கொண்டு முன் குறித்தீரே – இரத்தத்தினாலே நீதிமானாக்கி மகிமைப்படுத்தினீரே கர்த்தாவே
    உந்தன் கிருபைகளாலே என்றும் என்னை சூழ்ந்திடுவீர்
    கர்த்தாவே உந்தன் இரக்கங்களாலே
    நன்மையினாலே என்னை நிறைந்திடுவீர்
  2. மூன்றாம் வானம் வரையில் என்னை எடுத்துச் சென்றிடுவீர்
    தூதர்கள் பேசும் – பாஷைகள் பேசி ஆராதிக்கச் செய்திடுவீர்
    கேருபீன்கள் சேராபீன்கள் பாடிடும் பாடலைக் கேட்டிடுவேன்
    அவர்களோடு நானும் சேர்ந்து ஆவியில் நிறைந்து பாடிடுவேன்
  3. ஆபிரகாமை அழைத்து அவரை ஆசீர்வதித்தவரே
    ரெகோபோத்தாக ஈசாக்கைப் பலுகி பெருகச் செய்தவரே
    யாக்கோபை ஆசீர்வதித்தது போல என்னையும் ஆசீர்வதித்திடுவீர் யோசேப்பை உயர்த்தி மகிழ்ந்தது போல
    என்னையும் உயர்த்தி மகிழ்ந்திடுவீர்

Bro.சுந்தர ராஜன் (கோவை)
R-Pop Ballad T-100 B 4/4