வனாந்திர பாதையில் கானானின் – Vananthira paathaiyil kaananin

வனாந்திர பாதையில் கானானின் – Vananthira paathaiyil kaananin

வனாந்திர பாதையில் கானானின் சத்தம் கேட்குதே, – 2
என் நேசர் அவர், ராஜாதி ராஜா என்னை அழைத்து செல்கிறார்,-2

பல வருடமான அடிமைத்தனத்தில் இருந்து விடுவித்தாரே,
தாழாத என் நெஞ்சை தாழ்த்தி விட்டாரே, வாசலை திறந்து விட்டாரே, – 2

தேவனே உந்தனின் பலத்த கரத்தினால் இதுவரை என்னை தப்பு வித்தீரே,
தேவனே உந்தனின் பலத்த கரத்தினால் இதுவரை என்னை கொண்டு வந்தீரே,

வனாந்திர பாதையில் கானானின் சத்தம் கேட்குதே

பார்வோனின் சேனை என்னை பின்தொடர்ந்தாலும்,
எனக்காய் யுத்தம் செய்திரே,
வழி அறியாமல் தவித்த போது,
செங்கடலையும் பிளந்து விட்டீரே,- 2

தேவனே உந்தனின் பலத்த கரத்தினால் இதுவரை என்னை தப்பு வித்தீரே,
தேவனே உந்தனின் பலத்த கரத்தினால் இதுவரை என்னை கொண்டு வந்தீரே,

வனாந்திர பாதையில் கானானின் சத்தம் கேட்குதே, – 2
என் நேசர் அவர், ராஜாதி(சாரோனின்) ராஜா (ரோஜா) என்னை அழைத்து செல்கிறார்,-2 ‎